Close
மார்ச் 7, 2026 8:01 மணி

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 34 மாணவ,மாணவிகளுககு கலெக்டர் பாராட்டு..!

நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் படித்து, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள, மாணவ மாணவிகளுக்கு, கலெக்டர் துர்காமூர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல்:

அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், மாணவ, மாணவியருக்கு உயர்கல்வியோடு அவர்களின் திறன்களையும் மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 34 மாணவ, மாணவியர் எப்.டி.டி.ஐ., ஏ.ஐ.எஸ்.டி., என்.சி.எச்.எம்., ஜே.இ.இ., உள்ளிட்ட தேசிய அளவிலான் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் பிரச்சித்திபெற்ற க்ல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனுஸ்ரீ என்.ஐ.எப்.டி., (யு.ஜி.) தேர்வு எழுதி, ஹிமாச்சல் பிரதேசத்தில் பேஷன் டெக்னாலஜி (இளங்கலை) பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளார். இந்தியாவிலேயே தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் (நிஃப்ட்) ஆண்டுக்கு, 24 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் ஒருவராக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனுஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் சிறப்பு பெற்ற கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 34 மாணவர்களுக்கும் முதலாமாண்டு கல்வி கட்டணமாக, ரூ. 52 லட்சத்து, 26,392 அரசு செலுத்தியுள்ளது. மேலும், மொத்தமாக உயர்கல்வி பயில்வதற்கு, ரூ. 2 கோடிக்கு மேல் தமிழக அரசு செலுத்த உள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசு பள்ளிகளிலிருந்து, உயர்கல்வி பயில, இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு செல்லவிருக்கும், 34 மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு தேர்வு பெற்றுள்ள மாணவ மாணவிகள், தங்களது உயர்கல்வியை சிறப்பாக பயின்று சமூகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும். உயர்கல்வியோடு தங்களது தனித் திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள், தங்களுக்கு கிடைக்கின்ற, வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதோடு, சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும் தலை சிறந்த மனிதர்களாக திகழ வேண்டும் என அவர் கூறினார். நாமககல் சிஇஓ மகேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top