Close
மார்ச் 7, 2026 8:01 மணி

மாலைநேர இலவச படிப்பகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

மாலைநேர கல்வியகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது.

தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த இலவச படிப்பகத்தை அமைத்துள்ளார்.
இங்கு நூறுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியையும் நியமிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு படிக்க நூல் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையதளம் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர இளைஞர்கள் விளையாட தனது இடத்தில் விளையாட்டு மைதானமும் அமைத்து கொடுத்துள்ளார்.

இன்று மாலைநேர படிப்பகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் காமராஜரின் சாதனைகளை மாணவிகள் எடுத்துக்கூறினார்கள்.
இதற்கான எற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top