மதுரை
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.3 ஆனையூர் வார்டு அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து , பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன்குமார், ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாமினை ,கடந்த 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்து உள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது, இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதன் தொடர் நிகழ்வாக மதுரை மாநகராட்சி மண்டலம் 1 ஆனையூர் வார்டு அலுவலகத்தில் (வார்டு எண்.3 மற்றும் 4) பகுதிகள் மற்றும் மண்டலம் 5 (வார்டு எண்.79, 80, 81) சேதுராஜன் பத்மா திருமண மகாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை, அமைச்சர் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார்கள்.
முன்னதாக ,மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.54 மற்றும் 76 ஆகிய வார்டு பகுதிகளுக்கு பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை, மேயர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார்கள்.

மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டலம் 1 (வார்டு எண்.3, 4) ஆனையூர் வார்டு அலுவலகம், மண்டலம் 2 (வார்டு எண்.15, 31) மடீட்சியா அரங்கம், மண்டலம் 3 (வார்டு எண்.54, 76) பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுற்றுலா தகவல் மையம், மண்டலம் 4 (வார்டு எண்.86, 87) ராணி பொன்னம்மாள் கல்யாண மகால், கீரைத்துறை, மண்டலம் 5 (வார்டு எண். 79, 80, 81) சேதுராஜன் பத்மா திருமண மகால், ஜெய்ஹிந்துபுரம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறுவதை,
மேயர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
அடுத்த முகாம் 24.07.2025 அன்று மண்டலம் 1 (வார்டு எண்.8, 11) மாநகராட்சி (கிழக்கு) அலுவலகம் சர்வேயர் காலனி, மண்டலம் 2 (வார்டு எண்.1, 2 ) புஷ்பம் கல்யாண மகால், அஞ்சல் நகர், மண்டலம் 3 (வார்டு எண்.52) பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுற்றுலா தகவல் மையம், மண்டலம் 5 (வார்டு எண்.71, 74) மாநகராட்சி சமுதாய கூடம் பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், உதவி ஆணையாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், இராதா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




