Close
மார்ச் 7, 2026 6:03 மணி

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று துவக்கம்..!

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுக்கான மாதிரித் தேர்வு இன்று துவங்குகிறது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட உள்ள குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரடியாக இன்று 22ம் தேதி காலை 10.30 மணியளவில் துவங்கப்பட உள்ளது. இத்தேர்வு மண்டல அளவில் 7 மாவட்டங்கள் உள்ளடக்கி, டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் அசல் தேர்வினைப் போன்றே வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், 2024-2025 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் குரூப் 4 தேர்வில் 12 பேரும், சீருடைப்பணியாளர் போலீஸ் தேர்வில் 13 பேரும், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் 11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது ஆன்லைன்கிளாஸ்என்கேஎல்அட்ஜிமெயில்.காம் என்ற இ-மெயில் மூலம் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top