காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தினை ஒட்டி இன்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொள்ள முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்கு திருக்கோயில் சார்பாக காஞ்சி காமாட்சி அம்மன் புகைப்படமும் சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
மேலும் ஆடி மாதம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்த நிலையில் அனைவரிடம் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தார்.
ஆனால் இதனை எடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை சந்திக்க நன்றி பாக்கியமாக கருதுகிறேன். கூட்டணி கட்சிகளைப் பற்றி நயினார் நாகேந்திரன் தெளிவாக விளக்கமளிப்பார்.
துணை ஜனாதிபதி உடல்நிலை காரணமாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார் அவர் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
திமுகவுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி வைத்துள்ள ஒரே காரணத்திற்காக நேற்று ஆட்டோ ஓட்டுநரின் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்த காவல் துறையின் செயல் தவறானது. ஒரு சாராவின் மீது மட்டுமே நடவடிக்கை கூடாது.
பாஜக நிர்வாகிகள் இரு அணியாக செயல்படக்கூடாது எனவும் அவர்கள் எப்போதுமே ஒன்றாக செயல்படுவார்கள் என தெரிவித்தனர்
திமுக அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் நாள்தோறும் திமுக தனது சரிவை சந்தித்து வருகிறது.
அவர்களது கூட்டணியும் தற்போது உடைய காத்திருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள் 8 மாதம் பிறகு திமுக 2026 தேர்தலில் அவர்களுடைய தேர்தல் வரலாற்றிலேயே இது மோசமான தேர்தலாக இருக்கும். களத்தில் இது தெள்ளத் தெளிவாக தெரிகிறது பெண்கள் பாதுகாப்பு வளர்ச்சி என அனைத்திலும் திமுக கோட்டை விட்டது என தெரிவித்தார்.




