Close
மார்ச் 7, 2026 3:09 மணி

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம்: மாநில உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தமிழக ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருச்செங்கோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 நாட்கள் ஆய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் கிட்னி விற்பனை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்பாக புகார் எழுந்தது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் கிட்னி விற்பனை செய்தவர்கள் யார், வாங்கியவர்கள் யார், முறையான ஆவணங்கள் கொடுத்து கிட்னி தானம் பெறப்பட்டதா என்பது குறித்துசிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்தார்.

இதன்படி தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குனர் டாக்டர் வினித் மற்றும் மெடிக்கல் ஆக்ட் துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசன், மெடிக்கல் ஆக்ட் டிஎஸ்பி சீதாராமன் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று நாமக்கல் வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகத்தில் ஆவண சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து மேலும், 2 நாட்கள் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன், குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார், பள்ளிபாளையம்போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top