Close
மார்ச் 7, 2026 9:01 மணி

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : மதுரை மேயர் திறந்து வைத்தார்..!

புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து மாணவர்களிடம் உரையாடிய மேயர்

மதுரை:

மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் பயன்பாட்டிற்கு
திறந்து வைத்தனர்.

மதுரை மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் எண்.2 வார்டு எண்.31 கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் (இரண்டு வகுப்பறைகள்) SFC 2025-26 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறையினை பயன்பாட்டிற்கு மேயர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, மேயர் மற்றும் ஆணையாளர் அவர்கள் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளிடம் கற்றல் சம்பந்தமாக கலந்துரையாடினார்கள், மாணவர்கள் வாழ்வில் உயரிய நிலையை அடைய கல்வி மற்றும் விளையாட்டிலும் மிக ஆர்வமுடன் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வில் ,கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன்,உதவி ஆணையாளர் ரவிக்குமார், உதவி செயற் பொறியாளர் காமராஜ், உதவிப்பொறியாளர் அமர்தீப் மாமன்ற உறுப்பினர்கள் முருகன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top