Close
மார்ச் 7, 2026 6:03 மணி

வையாவூர் ரயில்வே கேட் பாதை சரிசெய்ய வலியுறுத்தி தனி ஒருவராக போராடிய யோகா ஆசிரியை..!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே , ரயில்வே கேட் பகுதியில் தரமான சாலை அமைக்காததால் அதிக விபத்துக்கள் நடப்பதாக கூறி அதனை சீர் செய்யாத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில்வே தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தினர்

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. அந்த ரயில்வே கேட்டை கடந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும், வையாவூர் பகுதி வளர்ந்து வரும் நகர விரிவாக்க பகுதியாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ரயில்வே கேட் தண்டாவாளங்களை கடக்கும் போது வாகனத்தில் செல்வோர் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை ரயில்வே காவலர்கள் மற்றும் ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு தெரிவித்தும் எந்த ஒரு சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளாததால் நாள் தோறும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என அனைவரும் விபத்துக்குள்ளாகி ரத்த காயங்களுடனே செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் வையாவூர் பகுதியை சேர்ந்த யோகா ஆசிரியரான பெண்மனி ஒருவர் இன்றும் தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தை தண்டவாளத்தின் குறுக்கே நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக ரயில்வே காவலர் வந்து இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறுகையில், நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கும் நிலையில் இதை சீர் செய்ய நிர்வாகம் முன் வராததை கண்டித்து அவருடன் தனி நபராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவ்வழியாக வந்த பொதுமக்களும் இதைக் கண்டு அவருக்கு ஆதரவாகவும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் உரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்து இதனை விரைவில் சரி செய்வதாக கூறியதன் பேரில் சற்று சமாதானம் அடைந்தாலும் அங்கிருந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 24 மணி நேரத்தில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இங்கு விபத்து நடந்தால் மத்திய அரசு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும் அவ்வளவுதானே ? உயிருக்கு மதிப்பில்லையா ? என் பெண் ஒருவர் தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி ரயில்வே நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top