Close
மார்ச் 7, 2026 6:03 மணி

முறையற்ற உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

கள்ளக்காதலுக்காக மகன் , மகளை கொலை செய்த பிரியாணி அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு வயது மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அபிராமிக்கும் அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு பழகி வந்தனர்.

இதற்கு இடையூறாக இருந்த மகன் மற்றும் மகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இது தொடர்பாக அபிராமி மற்றும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகியோரை குன்றத்தூர் போலீசார் கைது செய்து இது தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பா.உ.செம்மல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

இத்தீர்ப்பிற்கு முன் இருவரும் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதனை நீதிபதி நிராகரித்து குழந்தைகளை கொன்றது ஏற்க இயலாது என்பதும், மரண தண்டனை விதிக்க இயலாது என்பதால் மூன்று பிரிவுகளின் கீழ் கீழ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தீர்ப்பு அளிப்பதாகவும், அபராதமாக 15 ஆயிரம் ரூபாய் விதிப்பதாகவும் அதைக் கட்ட தவறும் பட்சத்தில் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top