Close
ஏப்ரல் 24, 2026 2:32 காலை

தமிழகத்தில் பிறந்த எல்லோருக்கும் முதல்வர் ஆகும் தகுதி இருக்கு : பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் முதல்வராகும் தகுதி இருப்பதாகவும் அதற்கு மக்கள் வாக்களி வேண்டும் - தேர்தல் கருத்து கணிப்பு வந்தவுடன் சட்டமன்ற உறுப்பினர்களே பொதுமக்களை திமுக விரட்டி அடிப்பதாக என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சங்கரன்கோவில் பரபரப்பு பேட்டி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நடைபெறும் ஆடி தபசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சங்கரன்கோவில் வருகை வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருள்மிகு சங்கரநாராணயன சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற அவருக்கு மாவட்ட பாஜகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்து. தொடர்ந்து நயினார் நாகேந்திரன் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணர் சுவாமி, கோமதிஅம்மன், சண்முகர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார்களா என்பது எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் கண்டிப்பாக நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேன் எனவும்.

இவர்களே ஒரு தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியதில் வெற்றி பெற மாட்டார்கள். என்பது தெரிந்தவுடன் அந்த விரகத்தியில் பொதுமக்களை விரட்டி அடிக்கக் கூடிய நிலையில் இன்றைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களே இருக்கிறார்கள். இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கு. ஆனால் இப்போது ஆட்சிமாற்றம் வந்து விடும் என்பதை எல்லோரும் தெரிந்து கொண்டார்கள் எனவும். அன்று எதிர் கட்சியாக இருக்கும்போது ஊர் ஊராக டீ கடைக்கெல்லாம் சென்று டீ குடித்தார்கள். பெட்டிகளை வைத்து 16- லட்சம் மனுக்களை வாங்கியதோடு மட்டும் இல்லாமல் 501 – தேர்தல் அறிக்கையும் சொன்னார். ஆனால் இதில் எதுவுமே நிறைவேற்றப் படவில்லை.

தொடர்ந்து முதலமைச்சராக வந்த பின்னர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று ஒவ்வொரு எம்எல்ஏக்களும் 10- கோரிக்கைகளை கேட்டனர். ஆனால் அதிலும் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. தற்போது கருத்து கணிப்பிலும் போலீஸ் ரிப்போர்ட் படுதோல்வி அடையும் என்ற தகவல் வந்தவுடன் இப்போது பட்டா தரப்படும், வீடுகட்டி தரப்படும் எனவும். சொல்லிக் கொண்டு இன்றைக்கு அரசாங்க சம்பளம் வாங்கும் ஒவ்வொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தெருவில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து திருமாவளவன் முதல்வர் ஆகுவதற்கு எல்லா தகுதியும் தனக்கு இருப்பதாக பேசிய கருத்திற்கு தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருக்கும் முதல்வர் ஆகுவதற்கு தகுதியிருக்கு. மக்கள் ஓட்டு போட வேண்டும் இறைவனின் ஆசிர்வாதம் என்றும் என பதில் அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top