Close
மார்ச் 7, 2026 8:01 மணி

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் உமா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 545 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றைப் பரிசீலனை செய்த ஆட்சியர், உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் இடம் இருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ. 18,153 மதிப்பீட்டில் தையல் மெசின் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கினார்.

இந்த நிகழ்வில் டிஆர்ஓ சுமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top