நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார்.
நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், நகர்ப்புற வீட்டு மனை பட்டா, நத்தம் பட்டா, இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 179 பேருக்கு ரூ. 1.60 கோடி மதிப்பில் பட்டாக்களை வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார். அந்த வகையில், நீண்ட நாட்களாக பட்டா வேண்டி மனு அளித்தவர்களுக்கு, வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்குவதில், தமிழக அரசின் வருவாய்த்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும், 5 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20,000 பேருக்கு, பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்
தொடர்ந்து, பாப்பிநாயக்கன்பட்டி, தத்தாத்திரிபுரம், செல்லப்பம்பட்டி, சர்க்கார் உடுப்பம், தாளம்பாடி, மின்னாம்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 179 பயனாளிகளுக்கு ரூ. 1.60 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மற்றும் இ -பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் பூபதி, டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சாந்தி, வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




