நாமக்கல்லில், மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மின்வாரிய, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்,
- கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக கள உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும்,
- நாமக்கல் தாலுகாவிற்குள் விருப்ப ஊர்மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும்,
- அனைத்து பணியாளர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்,
- பருவமழை தொடங்க உள்ள காரணத்தால் அனைத்து பணியாளர்களுக்கும் ரெயின் கோட் வழங்க வேண்டும்,
- கேங்மேன் பணியாளர்களுக்கு சீருடை, தையல் கூலி மற்றும் சலவை கூலி வழங்க வேண்டும்,
- தகுதிகாண் பருவம் முடித்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
- வேறு தாலுகாவிற்கு விருப்ப மாறுதல் உத்தரவு பெற்றுள்ளவர்களை உடனடியாக பணிவிடுப்பு செய்ய வேண்டும்,
- மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை வழங்கப்படாத பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்
என்பவை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் யுவராஜ், மாநில துணைத்தலைவர் ரமேஷ், தொழில்நுட்ப மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
நாமக்கல் தாலுகா செயலாளர் விக்னேஷ், பொருளாளர் அருள்ராஜ், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.




