Close
மார்ச் 7, 2026 4:17 மணி

சட்டமன்ற பணி குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சிறப்புரை

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வு கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கலந்துக்கொண்டு தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை வகித்தார். சட்டமன்றதொகுதி பார்வையாளர்கள் ஊரல் அண்ணாதுரை, ஆர்.டி.அரசு, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், ஜோதி, மாவட்ட கழக அவைத் தலைவர் ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வேல் முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செப்-17 கரூரில் திமுகவின் முப்பெரும் விழா

கரூரில் செப்டம்பர் 17 அன்று கழகத்தின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில், கரூரை நோக்கி அணிதிரள்வோம், ஆர்ப்பரிப்போம் என்று பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, கழகத் தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரத்தில் கழகத்தின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. முப்பெரும் விழாவில் கழக உடன் பிறப்புக்கள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்ற கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் ஆணையை ஏற்று, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள், கரூர் மாநகர் நோக்கி அணித் திரள்வோம், ஆர்ப்பரிப்போம், என அமைச்சர் எ.வ.வேலு அறிக்கையில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top