Close
மார்ச் 7, 2026 4:23 மணி

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேனற்பாடுகள் குறித்து, அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மீட்பு படகுகள், ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு தங்க வைப்பதற்காக, பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், பிற கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, நிவாரண முகாம்கள் மேலாண்மை குழு, பொது சுகாதார குழு, ஊடக மேலாண்மை, நெடுஞ்சாலை பணிகள் சார்ந்த குழுக்கள் அமைத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக 2 இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக 30 இடங்கள், குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் 1 என மொத்தம் 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் தேவையான அளவு உணவு பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். நீர்வளத்துறை நீர் நிலைகளின் மூலம் வரப்பெறும் நீர் அளவுகளை கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் மழையினால் சேதமடையும் சாலைகளை உடனடியாக சீர்செய்து முறையாக பராமரிக்க வேண்டும். வனத்துறை சார்ந்த அலுவலர்கள் வனப்பகுதியில் மழை பொழிவின் காரணமாக ஏதேனும் நிலச்சரிவு ஏற்பட்டால் அது குறித்த தகவல்களை உடனடியாக தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும்..

மேலும், வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மூலம் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் டிஎன்ஸ்மார்ட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து மழைகுறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top