Close
மார்ச் 7, 2026 4:40 மணி

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க கோரி கொமதேக தீர்மானம்

நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், எம்.பி., பேசினார்.

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என கெமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் எம்.பி., தலைமையில், நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் அனைத்து நிர்வாகிகளும் ஈடுபட்டு முறையாக நடைபெற பாடுபட வேண்டும்.
  • கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்க வேண்டும்.
  • நமது மாவட்டத்தில் தென்னை வளர்ப்பில் பல்வேறு பல்வேறு பூச்சி தாக்குதல் ஏற்படுவதால் சீரழிவு நிலையை போக்க பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் பூச்சிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுபோல், தமிழகத்திலும் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய ஏரிகளான தூசூர், அரூர், ஆலம்பட்டி, புத்தூர் ஏரி மற்றும் சங்ககிரி பகுதி உள்ளிட்ட அனைத்து ஏரிகளையும் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.
  • நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருச்செங்கோடு ரோட்டில் கோஸ்டல் சந்திப்பில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தி, பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலார் ராஜா, இணை செயலாளர்கள் சீனிவாசன், ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர்கள் பிரகதீஸ்வரன், ஜெகதீசன், வக்கீல்கள் அணி செயலாளர் அன்பழகன், கவுன்சிலர் பழனிசாமி, கந்தசாமி, மகளிர் அணி சத்யா, செல்லம்மாள் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top