Close
மார்ச் 7, 2026 6:03 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

வந்தவாசி தொகுதியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட மீரா காதா்ஷா தெரு மற்றும் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் பதிவேற்றம் செய்தோருக்கு அவா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

இதைத் தொடா்ந்து பணி முன்னேற்றம் குறித்து அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் அவா் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

ஆரணி

தாக்குதல்களுக்கு யாருக்குப் பொறுப்புதிருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆரணி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் – 2025 நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர் படிவ விவரங்களை 100 சதவீதம் செயலியில் பதிவேற்றம் செய்த கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்காளர் நிலைய அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தொடா்ந்து ஆரணி நகராட்சி வி.ஏ.கே நகரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் படிவங்களை வீடுகளில் வழங்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் – 2025 நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர் படிவ விவரங்களை 100 சதவீதம் செயலியில் பதிவேற்றம் செய்த கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்காளர் நிலைய அலுவலர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top