சோழவந்தான் அருகே நகரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வடை சாம்பாருடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், இதில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், கொரியர் கணேசன் , மு .காளிதாஸ், செல்லம்பட்டி எம். வி .பி. ராஜா, முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ், கண்ணா அம்மா பேரவை தன்ராஜ் ,பொருளாளர் திருப்பதி, திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன் புளியங்குளம் ராமகிருஷ்ணன் இலக்கிய அணி ரகு,நெல்லை பாலு, விவசாய அணி வாவிட மருதூர் ஆர்.பி .குமார், புதுப்பட்டி பாண்டுரங்கன் கவி காசிமாயன், சிவசக்தி வழக்கறிஞர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




