Close
ஏப்ரல் 23, 2026 11:30 மணி

சோழவந்தானில் ஆர்பி உதயகுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சோழவந்தான் அருகே நகரி பகுதியில், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு நிர்வாகிகள்  வெற்றிலை மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், விவசாய அணி மாவட்ட இணைச்செயலாளர் ஆர். பி. குமார், தென்கரை நாகமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், எம். வி. கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், வாடிப்பட்டி காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி எம் .வி.பி. ராஜா, வாடிப்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,

மகளிர் அணி லட்சுமி நிர்வாகிகள், திருமங்கலம் தமிழழகன், வெற்றிவேல், திருப்பதி, துரை தன்ராஜ் ,சிவசக்தி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், ரகு பாசறை மணிமாறன், முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன், புதுப்பட்டி பாண்டுரங்கன், குருவித்துறை காசிநாதன், தண்டலை ஆனந்த், மகளிர் அணி சாந்தி மாரிமுத்து, வனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top