Close
மார்ச் 10, 2026 8:40 மணி

திருச்சுழி தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி வேட்டாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்: விடுதலை சிறுத்தை கட்சி ஆலோசனை கூட்டத்தில தீர்மானம்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார்.

மண்டல செயலாளர் விடுதலை சேகரன், துணை செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாநில துணைப் பொதுச்செயலாளர் கலைவேந்தன் புதிய நிர்வாகிகளை, அறிமுகப் படுத்தி வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் காரியாபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பாப்பணம் காவியன், மேற்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன், திருச்சுழி வடக்கு ஒன்றியச் செயலாளர் அப்பாவு, தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்க்கண்ணன், நரிக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர். சித்திரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் கடல்முத்து கணேஷ் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருமாவளவன் உத்தரவின்படி, மதவாத சாதியவாத மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் ஒன்றிய பா.ஜ.கவையும், அதற்கு துணைபோகும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுப்பது என்றும்,

திருச்சுழி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்வது என்றும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அம்பேத்கர் வெண்கல சிலையை தமிழ்நாடு அரசு நிறுவிட வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top