Close
மே 6, 2026 10:24 மணி

வடமொழி எழுத்தும் தமிழக அரசியலும்

நான் மதுரை செல்லும்போதெல்லாம் கோரிப்பாளையம் பகுதியை கடக்கும்போது அரசு மருத்துவமனை பெயரை பார்க்கும்போது இராசாசி அரசு மருத்துவமனை என்ற பெயரை பார்ப்பேன். அதற்கு முன்பு எர்ஸ்கின் மருத்துவமனை என்ற பெயர் அதற்கு பெயர்.

வடமொழி எழுத்து தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற தாக்கம் காரணமாக இராஜாஜி என்ற பெயர் இராசாசி என மாறியிருக்கிறது என நினைத்தேன். ஆனால் சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை பெயர் இசுடான்லி மருத்துவமனை என பெயர் மாற்றம் பெறவில்லை. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ராசிவ்காந்தி அரசு மருத்துவமனை என பெயர் மாற்றம் அடையவில்லை.  இதற்கெல்லாம் காரணம் ராஜாஜியை கேவலப்படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணமே!

சரி அதை விட்டு விடுவிடுவோம். தமிழக முதல்வர்களை பாருங்கள். அனைவரின் பெயரிலும் வடமொழி எழுத்து இருக்கும். இதனை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா. ஸ்டாலின், விஜய்

அனைவரின் பெயரிலும் வடமொழி எழுத்து. காமராசர், எம்சிஆர், செயலலிதா, இசுடாலின், விசை என்று கூற மாட்டார்கள்.

இதில் விதிவிலக்கு கருணாநிதி மட்டுமே. அண்ணாதுரையை விட்டு விட்டாய் என கேட்பீர்கள். ஆனால் அண்ணாதுரை எம்எல்ஏவாக முதல்வர் பதவி ஏற்கவில்லை. பக்தவச்சலம் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் நிற்கவில்லை. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக களம் காணவில்லை.

விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தவர்கள்.

வடமொழி ஆதிக்கம் என்று கூறும் தமிழகத்தில் வடமொழி பெயர் உள்ளவர்கள் தான் முதல்வர்கள். அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்கள்.  இதுதான் நகைமுரண்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top