பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாமக்கல்லை சேர்ந்தவர் சுந்தரராஜன் (71). லாரி அதிபர். அவர், தனது பூர்வீக சொத்தை தம்பிக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடிவு செய்தார். அதையடுத்து, நாமக்கல் மோகனூர் ரோட்டில், தாலுகா ஆபீஸ் வளாகத்தில் செயல்படும் ஜாயிண்ட் 2 இணை சார்பதிவாளரை அனுகினார்.
அப்போது தான செண்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் மனோகரன் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரராஜன் ரூ. 30 ஆயிரம் தருவதாக தெரிவித்தார்.
அதையடுத்து, லஞ்ச பணத்தை, புரோக்கர் சதீஷிடம் கொடுக்க வேண்டும் என சார்பதிவாளர் தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் தர விருப்பம் இல்லாத சுந்தரராஜன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில், போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரொக்கப்பணம், ரூ. 30 ஆயிரத்தை சார்ர் பதிவாளர் அலுலகத்தில், புரோக்கர் சதீஷிடம், சுந்தரராஜன் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கர் மற்றும் சார் பதிவாளர் மனோகரன் இருவரையும், கையும் களவுமாக பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது




