Close
ஜூன் 18, 2026 1:28 காலை

கலசபாக்கம், செங்கம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் செங்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் கலசப்பாக்கம் பிர்காவுக்கு நடைபெற்ற ஜமாபந்தியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிவா தலைமை தாங்கினார். தாசில்தார் தேன்மொழி, தனி தாசில்தார் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் பொன்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுதாகர் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ மக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று பேசியதாவது, ஜமாபந்தியில் கலசப்பாக்கம் பிர்கா பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து வருகின்றனர், அவர்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்க வேண்டும், மக்கள் கொடுக்கும் மனுக்கள் அனைத்தும் சரியான முறையில் துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து உரியநடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். அதே போல் உங்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் நான் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, பழனிராஜ், ரமேஷ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் துரை, ஒன்றிய இளைஞரணி சபரி, துணை தாசில்தார்கள் முருகன், காசி, மாவட்ட பிரதிநிதிகள் எஸ்டிடி ஏழுமலை, ஏழுமலை மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம்  (ஜமாபந்தி) துவக்க விழாவை செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அன்பழகன் அவர்கள் தலைமையில், முன்னாள் அமைச்சர், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் வேலு , ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், வருவாய் வட்டாட்சியர் முருகன் அவர்கள்,வருவாய்த்துறை அலுவலர்கள், அரசின் பிற துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top