Close
ஜூன் 19, 2026 12:48 காலை

நாமக்கல் மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார், சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த செல்வ பாலாஜி நாமக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் இன்று காலை செல்வ பாலாஜி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார்.

பின்னர் அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் மூலம் சிறந்த மாநகராட்சி நிர்வாகம் என்ற விருதை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top