Close
ஆகஸ்ட் 7, 2026 9:10 மணி

திருவண்ணாமலைக்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.

கிரிவலம் மட்டுமின்றி, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி உள்ளிட்ட பல ரிஷிகள் மற்றும் ஞானிகள் வாழ்ந்த பூமியாகவும் திருவண்ணாமலை விளங்குகிறது.

திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருவண்ணாமலைக்கு வருகை தரவுள்ளார். ரமணாசிரமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி காவல்துறைக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்திற்கு வருகிறார்.

புதுச்சேரியில் ஞாயிறு காலை 8:00 மணி அளவில், புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு, காலை 10:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்று, கோவிலில் தரிசனம் செய்கிறார். ரமணாசிரமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

கிரிவலப் பாதை ஒட்டி உள்ள அரசு கலைக் கல்லூரி ஹெலிபேடு தளங்களை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார்  மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, ரமணரின் ஆசிரமத்திற்கு சென்று 40 நிமிடங்கள் தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top