இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை கீர் ஸ்டார்மர் தனது பதவியில் தொடருவார். நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு முன்னதாகவே புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டி பர்ன்ஹாம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மூத்த தொழிலாளர் கட்சித் தலைவராகக் கருதப்படுகிறார். அவரது நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள் காரணமாகவே, கீர் ஸ்டார்மருக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு அவர் முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆண்டி பர்ன்ஹாம் தன்னை ஒரு “உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக” அடையாளப்படுத்திக் கொள்வதால், தொழிலாளர் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. பொதுப் போக்குவரத்து முறையைச் சீரமைத்ததற்காகவும் வீடற்றோர் பிரச்சினை மற்றும் மண்டல சமத்துவமின்மைக்காகப் போராடியதற்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.
நாற்காலிக்கு சண்டை பெரிதாக ஒன்றுமில்லை. சரியான தேர்வு என்றே கருதுகிறேன், தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர் என்கிற ரீதியில்.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋




