Close
ஜூன் 27, 2026 1:51 காலை

நாமக்கல்லில் 27 நட்சத்திர மரங்கள் நடும் தெய்வீக பசுமை திருவிழா

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பெரியப்பட்டியில் நட்சத்திர மரக்கன்றுகள் நடும் பசுமை விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர மரங்கள் நடும் தெய்வீக பசுமை திருவிழா நடைபெற்றது.

நாமக்கல் மாநகராட்சி, கோவை ராமகிருஷ்ணா மிஷன், அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், பெரியப்பட்டி பிரசன்ன கல்யாண வெங்கட் ரமண சுவாமி கோயில் வளாகத்தில் நட்சத்திர மரம் நடும் விழா தர்மகர்த்தா ராஜகோபால் தலைமையில் நடந்தது.

பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற டி.இ.ஓ., உதயகுமார், டாக்டர் குழந்தைவேல், கணேசன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், உத்திராடம், திருவோணம் உள்ளிட்ட 27 நட்சத்திரங்களுக்கு, எட்டி, நெல்லி, அத்தி, நாவல், கருங்காலி, மூங்கில், பலா, அத்தி, எருக்கு உள்ளிட்ட 27 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

அப்போது, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடுவதன் பயன்கள், அவற்றின் ஆன்மிகம் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top