Close
ஜூன் 28, 2026 1:18 காலை

கனிமவளக் கொள்ளை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

நாமக்கல்லில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி கூறியதாவது:

தமிழகத்தில் அனுமதியின்றி மணல் மற்றும் கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்பட்டு, போலியான டிரான்சிட் பாஸ் மற்றும் அனுமதி சீட்டுகள் மூலம் கிராவல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தப்பட்டதால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை அரசு கவர்னர், முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்டவிரோத கனிமக் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டுகின்றனர். கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்திய எங்கள் மீது கடந்த ஆட்சியில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சில குவாரிகளில் ஒரு லோடுக்கு ரூ.2 ஆயிரம் வரை மாமூல் வசூல் செய்து, லாரிகளுக்கு போலியான டிரான்சிட் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மணல் லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் வழக்குகளில் சிக்கி அதிக அளவில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.

கனிம வளங்களை முறையாக நிர்வகித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும். எனவே சட்டவிரோத குவாரிகள், ஓவர்லோடு போக்குவரத்து, போலி டிரான்சிட் பாஸ், அரசியல் நிதி வசூல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குவாரி உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top