Close
ஜூலை 7, 2026 12:49 காலை

சோழவந்தானில் இருந்து திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர வராததால் பொதுமக்கள் பயணிகள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்

குறிப்பாக திருமங்கலம் செக்கானூரணி செல்ல வேண்டிய பயணிகள் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது அதிலும் இரவு ஆறு மணிக்கு மேல் பேருந்துகள் முறையாக வருவதில்லை

இதற்கு காரணம் மொத்தம் உள்ள பேருந்துகளில் மூன்று பேருந்துகள் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும், மூன்று பேருந்துகள் செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் வருகிறது. ஒரே ஒரு பேருந்து மட்டும் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்று வருகிறது

இதன் காரணமாக இரவு ஆறு மணிக்கு மேல் வரவேண்டிய பேருந்துகள் திருமங்கலம் மற்றும் செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ள காரணத்தால் மூன்று பேருந்துகள். நான்கு பேருந்துகள் என மொத்தமாக வந்து செல்கிறது

இதனால் செக்கானூரணி சென்று தேனி கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் திருமங்கலம் சென்று விருதுநகர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது

இந்த நிலையில் நேற்று இரவு ஏழு மணி முதல் சுமார் 9 மணி வரை சோழவந்தான் பேருந்து நிலையத்தில் திருமங்கலத்திற்கு செல்ல வேண்டிய பேருந்துகள் வராத நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது வயதான பெண்கள் பேருந்து நிலையத்திற்குள் படுத்து உறங்கி விட்டனர்

ஒரு வழியாக 8 50 மணி அளவில் செக்கானூரணிக்கு செல்ல வேண்டிய பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்தது அதில் முண்டியடித்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி அமர்ந்தனர். பின்னர் திருமங்கலம் பேருந்து வந்த நிலையில் அதில் ஏறி அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு திருமங்கலம் பேருந்து வந்ததால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் எந்த பேருந்து முதலில் செல்லும் என்ற நிலையில் குழப்பத்தில் இருந்தனர்
இதே போன்று செக்கானூரணியிலும் 2 மணி நேரமாக சோழவந்தான் பேருந்து வராததால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததாக பேருந்தில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் விரக்தியுடன் கூறினார்

இதில் போக்குவரத்து பணியாளர்களை சொல்லி குற்றமில்லை அதிகாரிகள் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகள் சொன்னால் பேருந்தை முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியாளர்கள் இயக்குவார்கள் ஆகையால் அதிகாரிகள் தான் பேருந்தை முறையாக இயக்க ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

கடந்த ஐந்து ஆண்டுகளாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்ல வேண்டிய பேருந்துகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ஆட்சி மாறிய பின்பும் அதே நிலை தொடர்வதாக பொதுமக்கள் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கும் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தானிற்கும் குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனைக்கு கூடுதல் பேருந்துகளை வழங்கி திருமங்கலத்தில் இருந்து 9 மணிக்கு மேல் சோழவந்தானுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top