Close
ஜூலை 10, 2026 12:24 காலை

படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை உள்ளே ஏற்றிய பிறகே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்துக்குள் ஏறிய பிறகே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆமூர் நோக்கி இயக்கப்படும் அரசு பேருந்து TN58N3209 அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய முயன்றனர்.

இதைக்கவனித்த ஓட்டுநர், மாணவர்களை சத்தமிட்டு எச்சரித்து, அனைவரும் பேருந்துக்குள் முழுமையாக ஏறியதை உறுதி செய்த பின்னரே பின்கதவை மூடி பேருந்தை இயக்கினார்.

மாணவர்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து பொறுப்புணர்வுடன் செயல்பட்ட ஓட்டுநரின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று ஒவ்வொரு அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடித்தால், படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் பல உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் பேருந்துகளில் இடம் இருந்தும் மாணவர்கள். பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வழக்கமாக உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, சமயநல்லூர், திருவேடகம் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தில் யணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டிலில் தொங்கியபடி பயணம் செய்வதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதை தடுக்க போக்குவரத்து போலீஸார், இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் இல்லாதவர்களை மடக்குவது போன்றது, படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை மடக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top