நாமக்கல்லில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மதுபாலன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ணடு, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அதிகாலை நேரத்தில், பொதுமக்கள் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று காலை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் திடீரென்று அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பள்ளி கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர் பொதுமக்களிடமும், அத்லெடிக் பயிற்சிகளை செய்த விளையாட்டு வீரர்களிடமும் கலந்துரையாடல் செய்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மாவட்ட ஆட்சியருடன் நடைப்பயிற்சியில் கலந்துகொண்டார்.




