Close
ஜூலை 29, 2026 8:36 மணி

நாமக்கல் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் பார் தொடர்பான ஒப்பந்தம், மதுபான பாட்டில் கொள்முதல் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து பார்கள் விவரம், மதுபான பாட்டில் கொள்முதல் தொடர்பான வரவு, செலவு கணக்கு விவரம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மாலை 5 மணியைக் கடந்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருகிறது. இந்த ஆய்வு இரவு வரை நீடிக்கலாம். ஆய்வின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top