Close
ஜூலை 29, 2026 7:24 மணி

நாமக்கல்-சேலம் ரோடு ஜங்சனில் டிராபிக் ஜாம்: பதிநகர் வழியாக போக்குவரத்து மாற்றம்

நாமக்கல் நகரில் சேலம் ரோடு ஜங்சனில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பதிநகர் வழியாக வாகனங்கள் செல்லும் வகையில், நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது. அவற்றை குறைக்க, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இருப்பினும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து காவல்துறையினர் விழிபிதுங்கி உள்ளனர்.

குறிப்பாக, பீக் அவர் நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், சேலம் ரோடு கார்னர், கோட்டை ரோடு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் தினறுகின்றன.

இந்நிலையில், நாமக்கல் காவல் நிலையத்தில், சேலம் ரோடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராஜேஸ்வரன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, சேலம் ரோட்டில் இருந்து நாமக்கல் நகருக்குள் நுழைந்து, சேலம் ரோடு கார்னர் வழியாக திருச்செங்கோடு ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், பதிநகர் வழியாக, திருச்செங்கோடு ரோட்டிற்கு சென்றடைய வேண்டும் என, போக்குவரத்து மாற்றம் செய்து அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம், சேலம் ரோடு ஜங்கசனில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சீரங்கன், நாமக்கல் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோதி குப்புசாமி உள்பட பலர்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top