புதிய பேருந்துகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போக்குவரத்து பனிமனை மற்றும் செக்காணூரணி போக்குவரத்து பனிமனைக்கு தமிழ்நாடு அரசால் 5 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளை, உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய், போக்குவரத்து பனிமனை கிளை மேலாளர்கள் சீனிவாசன், தினேஷ்குமார் இணைந்து பூஜை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, ஓட்டுநர் நடத்துநர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய், பொதுமக்களுடன் இணைந்து அரசு பேருந்தில் பயணம் செய்தது பேருந்தை ஆய்வு செய்தார்.




