நாமக்கல் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், வரும் 19ம் தேதி திருச்செங்கோட்டில் துவங்குகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர், முன்னாள் எம்.பி., சின்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தால் நடத்தப்படும், மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் செப்டம்பர் வரும் 19, 20 ஆகிய 2 நாட்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த தடகள போட்டியில் 8, 10, 12, 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறும் வகையில் தனித்தனி பிரிவுகளாக நடைபெறும். இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெறலாம். 50 மீட்டர், 100மீட்டர், 200மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் சிறந்த வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் நடைபெறும், மாநில அளவிலான போட்டிகளில் நாமக்கல் மாவட்டம் சார்பாக பங்கேற்பாளர்கள்.
போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் கார்த்திக் -9444879213, கார்த்திகேயன்- 94443777190, கார்த்திக் -9942125252 என்ற செல்போன் எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




