Close
செப்டம்பர் 13, 2026 7:52 மணி

நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி

இந்தியா முழுவதும் கடந்த ஏப். 1 முதல் திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிகளின் படி, பொதுமக்கள் அனைவரும், மக்கும், மக்காத, சுகாதார மற்றும் சிறப்பு கழிவுகள் என, 4 வகையாக பிரித்து குப்பைகளை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண் விதிகள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு, கணேசபுரம் முதல் தெருவில் உள்ள பொதுமக்களுக்கு, திடக்கழிவு மேலாண் தொடர்பான கோலப்போட்டி நடத்தப்பட்டது.

இதில், 16 வீடுகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் அவரவர் வீட்டின் முன், குப்பைகளை நான்கு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை தெரிவித்து, மக்கும் கழிவுக்கு பச்சை நிற தொட்டியும், மக்காத கழிவுகளுக்கு நீல நிற தொட்டியும், சுகாதார கழிவுகளுக்கு சிவப்பு நிற தொட்டியும், சிறப்பு கழிவுகளுக்கு கருப்பு நிற தொட்டியும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கோலமாக வரைந்தனர்.

இந்த கோல போட்டியின் முடிவுகளை, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி பார்வையிட்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மற்றும் மூன்றாம் பரிசு என தேர்வு செய்தார். இதில், ரம்யா முதல் பரிசும், தீபா, சுதா, விஜயலட்சுமி ஆகியோர் இரண்டாம் பரிசும், சூர்யா, சாந்தி, கனகா ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் சுப்ரமணியன், நந்தினி, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top