Close
செப்டம்பர் 20, 2024 9:42 காலை

புதுகை நகராட்சித் தேர்தல்: 41 வது வார்டில் மக்கள்நீதிமய்யம் வேட்பாளர் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி 41 வது வார்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜெய்பார்த்தீபன்

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  41 -ஆவது வார்டில்  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  ஜெய்பார்த்தீபன்  தனது பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  50 % இடங்களை மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  அதனடிப்படை யில்,  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  தேர்தலை நடத்துகிறது. இதில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள்  பகுதிகளில் மொத்த 189 இடங்கள் உள்ளன. இதில்  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்ட 2  இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 187 இடங்களுக்கு பிப்.19 -இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.  187  இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நிற்கின் றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர்.  தற்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில்  41 -ஆவது வார்டில்  போட்டியிடும்  ஜெய் பார்த்தீபன், தனது வார்டுக்குள்பட்ட குறிஞ்சி நகர், பாலாஜி நகர், சாலுவன் நகர், முனிக்கோவில் காலனி, பொன்நகர்,  சேங்கைத் தோப்பு, ஈ.வெ.ரா.மணியம்மை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்   வீடு வீடாகச்சென்று  டார்ச் லைட்  சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். கட்சி நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top