Close
செப்டம்பர் 20, 2024 10:00 காலை

எலத்தூர் பேரூராட்சியில் அதிமுகவினர்  தீவிர பிரசாரம்

எலத்தூர் பேரூராட்சி

எலத்தூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களுக்கு  ஆதரவாக பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன் பிரசாரம் செய்தார்

கோபி தொகுதிக்குள்பட்ட எலத்தூர் பேரூராட்சியில் அதிமுகவினர்  தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
எலத்தூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் களுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு  வாக்கு சேகரித்து வருகின்றனர்.
எலத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் அதிமுக போட்டியிடு கின்றனர். இந்த பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன் தலைமையில் அதிமுக வினர் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

எலத்தூர் பேரூராட்சியில்  சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டப்பணி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை தெரிவித்து  வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top