Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

பர்தா அணியத்தடை விதிப்பு: கர்நாடக அரசைக்கண்டித்து அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

கர்நாடக அரசைக்கண்டித்து புதுகை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறை நிகழ்த்தக்கூடிய தேச துரோகிகளை கண்டித்து அனைத்துக் கட்சி இயக்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

புதுக்கோட்டை  அண்ணா சிலை அருகே மாலை   சிறுபான்மை பிரிவு மாவட்டத்தலைவர் குட்லக் ஏ.ஆர். முஹம்மது மீரா தலைமையில்

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் புதுகை மாவட்ட தலைவர் முபாரக் ஜான் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்,  தமிழ் நாடு மகிளா காங்கிரஸ் மாநில இனைச்செயலாளர் பெமிலா விஜயகுமார்,  தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ். மாநில இணைச் செயலாளர் மருத்துவர் பெ. மகாலட்சுமி.  விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட தலைவர் திருமறவன்,  நகர காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் பாபு, ராஜா முஹம்மது, பாருக் ஜெய்லானி, அப்துல்லாஹ்,தமுமுக  மாவட்ட தலைவர் அப்துல் கனி, மஜக மாநில இணை செயலாளர் துறை முகம்மது, மனித நேய மக்கள் ஜனநாயகக் கட்சி ரஹீம் தாலிப், எஸ்டிபிஐ மாவட்டத்தலைவர் சலாவுதீன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் யூசுப் ராஜா,  நிஜாமுதீன், அப்துல் மன்னன்,

மனிதநேய மக்கள்கட்சி அப்துல் ரகுமான், ஆம் ஆத்மி மாவட்ட தலைவர்அப்துல் ஜப்பார்நியாஸ் அகமது,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாவா ஈஸ்வரன்,தமிழன் சாகுல் ஹமீத்,இஸ்லாமிய  ஜனநாயக பேரவை ஷாஜகான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்முகம்மது மீரான் ஆகியோர் கண்டஉரையாற்றினர்.AIMIM மாநில செயலாளர் ஏஆர்.சுல்தான் மன்பஈ தேவ்பந்தி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top