Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

புதுகை நகராட்சி 41 வது வார்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 41 வது வார்டில் வாக்கு சேகரித்த மக்கள் நீதிமய்யx் வேட்பாளர் ஜெய்பார்த்தீபன்

புதுக்கோட்டை நகராட்சியின்  41 -ஆவது வார்டில்  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  ஜெய்பார்த்தீபன்  தனது பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.  தற்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில்  41 -ஆவது வார்டில்  போட்டியிடும்  ஜெய் பார்த்தீபன், தனது வார்டுக்குள்பட்ட குறிஞ்சி நகர், பாலாஜி நகர், சாலுவன் நகர், முனிக்கோவில் காலனி, பொன்நகர்,  சேங்கைத் தோப்பு, ஈ.வெ.ரா.மணியம்மை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்   வீடு வீடாகச்சென்று  டார்ச் லைட்  சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.   கட்சி நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரம் செய்தனர்.

பின்னர் மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் ஜெய்பார்த்தீபன்  கூறியதாவது:

அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதிசெய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில் நுட்பத்தைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும்.

கிராமசபை போல, தங்களது வார்டிற்கு என்ன தேவை என்பதை அந்தந்தப் பகுதி மக்களே முடிவுசெய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். கூட்டத்தில்  மாதாந்திர செயல்பட்டுக்கானஅறிக்கையைச் சமர்ப்பிக்கப் படும்.

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விவாதித்து, நிதிஒதுக்கும் கவுன்சிலர் கூட்ட விவாதங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும்.

தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடுதேடி உள்ளாட்சி சேவை மையம் வரும் – மக்கள் தேவைகள் வீட்டு வாசலில் நிவர்த்தி செய்யப்படும்.குறிப்பிட்ட கால உத்தரவாதத்துடன் கூடிய தரமான சாலைகள், உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் போடப்படுவதை உறுதி செய்வோம்.

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு உயர்தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி அமைத்து குப்பைக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். பொது இடங்களில் தேவையான கழிப்பிடங்கள் உறுதி செய்யப்படும்.

வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகள் வசூலிக்கும் முறை சீரமைக்கப்படும். பள்ளிகள் & மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். முறையான பராமரிப்புடன் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகம் அமைப்பது உறுதி செய்யப்படும்.

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைக்கப்படும். இதன் மூலம் அவசர ஊர்திகள் சென்சார் உதவியுடன் கண்டறிந்து தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

மழைநீர் தேங்காத தெருக்கள் என்ற நிலையை அடைய. முறையான மழைநீர் வடிகால் அமைப்புகள் அமைக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் கட்டிடவரைபட அனுமதிகள் விரைவாக லஞ்சமில்லாமல்  வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றார் ஜெய் பார்த்தீபன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top