Close
செப்டம்பர் 20, 2024 7:41 காலை

புதுகை நகராட்சி 25 வது வார்டில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 25 வது வார்டு திமுக வேட்பாளர் திலகவதிசெந்திலுக்கு பிரசாரம் செய்த மாற்றுத்திறனாளிகள்

புதுக்கோட்டை நகராட்சிக்கு   25 -ஆவது வார்டில் திமுக வேட்பாளராக  போட்டியிடும்  திலகவதி செந்திலுக்கு ஆதரவாக புதுக்கோட்டை  கம்பன் நகர் பகுதிகள் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் தங்கம் தலைமையில் திரளான உறுப்பினர்கள்  சனிக்கிழமை  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  25 -ஆவது வார்டில்  திமுக சார்பில் எஸ்.திலகவதி போட்டியிடுகிறார் . இவர்  திமுக பொருளாளர்  ஆ. செந்தில்   மனைவி ஆவார்

இவரது தந்தை ஆறுமுகம் திமுகவின் மூத்த முன்னோடியாகத் திகழ்ந்தவர். அரசியல் பாரம்பரியமிக்க குடும்பம் என்பதால்  வார்டு மக்களிடம் நன்கு   அறிமுகமானவர். தற்போது  திமுக சார்பில் திலகவதிசெந்தில் களம் காண்கிறார்.

இந்த, 25  -ஆவது  வார்டுக்குள்பட்ட சாந்தநாதபுரம்  கம்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  வீடு வீடாகச்சென்று  வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டைக்கு கம்பன் நகர் பகுதியில்   மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் தங்கம்  தலைமையில்  நிர்வாகிகள் திரண்டு சென்று    உதயசூரியன்  சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். இதில், திமுக   நிர்வாகிகள் மதியழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top