Close
செப்டம்பர் 20, 2024 6:33 காலை

மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைத்தது அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை

27 வது வார்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுக  ஆட்சி யில்தான்  மக்களின் அடிப்படைப் பிரச்னை களை தீர்த்து வைக்கப்பட்டதுடன் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் முன்னாள் சுகாதார அமைச்சர்  டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை நகராட்சி 42  வார்டுகளில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை  வார்டு வாரியாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்க ளிடம்  இரட்டை இலைச்சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

புதுகை நகராட்சி 27 -வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு (எ) கனகசபையை ஆதரித்து     முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ் கர்  மேலும்  பேசியதாவது: அதிமுக மக்களுக்கு கொடுக்கும் கட்சி.  மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் கட்சியாகும்

கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் புதுக்கோட் டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி பல் மருத்து வக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள   மக்கள் நலத் திட்டங்கள்  செய்துள்ள சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம்  வாக்குகளை கேட்கிறோம். அதற்கான முழுத்தகுதியும் அதிமுகவுக்கு இருக்கி றது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருப்ப தை பார்க்க முடிகிறது. ஆகவே, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெறும் என்றார் முன்னாள் அமைச் சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏ வுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

இதில், நிர்வாகிகள் வி.சி. ராமையா, எஸ். செல்லத்துரை, பாசறை கருப்பையா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top