Close
செப்டம்பர் 20, 2024 9:44 காலை

புதுகை நகராட்சி 21 வது வார்டு அதிமுக வேட்பாளர் மலர்விழி முத்து வீடு வீடாக நேரில் சென்று வாக்கு சேகரித்தார்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 21 வது வார்டில் வேளார் தெருவில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் மலர்விழிமுத்து

புதுக்கோட்டை நகராட்சி  21 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  மலர்விழிமுத்து   புதன்கிழமை வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை நகராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  21 -ஆவது வார்டில்    மலர்விழிமுத்து போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 2006-11 மற்றும் 2011-16  ஆகிய ஆண்டுகளில்  நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்து வார்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்த வார்டில்  ஆண், பெண் உள்பட மொத்தம் 3,140 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் களம் காணும் மலர்விழிமுத்து  தனது வார்டுக்குள்பட்ட   ஈஸ்வரன்கோவில் தெரு, வஉசி நகர், மாயாண்டிசாமி நகர் சின்ன ரயில்வேகேட், பொன்னையா ஊருணி, வேளார் தெரு, காட்டுமாரியம்மன்கோவில், கம்பர் தெரு, முஸ்லிம் தெரு, செட்டி தெரு  ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச்சென்று  இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இவருடன் கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் உடன் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top