Close
செப்டம்பர் 20, 2024 6:47 காலை

விழாக்காலத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை

புதுக்கோட்டை

தமிழ்நாடு மேடை கலைஞர்கள்சங்க செயலர் ஆக்காட்டி ஆறுமுகம்

திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க வேண்டுமென முதல்வரை  தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக  அச்சங்கத்தின் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:   திருவிழா காலம் தொடங்கிவிட்டது. கோயில்களில் இசை நிகழ்ச்சிகள், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு நடந்து, கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில், கொரோனா ஊரடங்கை காரணம் சொல்லி, அனுமதி மறுக்கப்பட்டு, நிகழ்ச்சிகளை எல்லாம் விழாக் குழுவினர் ரத்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கலைஞர்கள், வாழ்வாதாரம் இழந்து கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிப் போனதால் அவர்களும் அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்களும் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இச்சூழலில்,  கலைஞர்கள் தாங்களை பெரிதாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில தளர்வுகளோடு, யாரும் பாதிக்கப்படாத வகையில், நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கிட, உத்தரவிட வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கலைஞர்களின் சார்பில், தாங்களுக்கு தாழ்மையான வேண்டுகோளை வைப்பதாக ஆக்காட்டி ஆறுமுகம் (99655 730191)  முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top