Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புதுக்கோட்டை பெருங்களூர் மங்களாம்பிகா-வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரி வழிபாடு

புதுக்கோட்டை

பெருங்களூர் சிவன்கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா சிறப்பு பூஜை

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா சமேத வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரி   சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் உள்ள  மங்களாம்பிகா சமேத வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரியை   முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி,  ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவசாரியார்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

புதுக்கோட்டை
பெருங்களூர் சிவன்கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்ற சிவாச்சாரியார்கள்

வம்சோதாரகர்  சுவாமிக்கு,  மங்களாம்பிகா சுவாமிக்கு         மங்கள வாத்தியம் முழங்க   பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகமும் நான்கு காலபூஜையும் நடந்தது.

கோயில் நிர்வாகிகள் எஸ்கேபி.சிடி மற்றும் அறங்காவலர்கள்   முன்னிலையில்       நடைபெற்றது.         ஏற்பாடுகளை      ஞான ஸ்கந்த குருக்கள் , பிரபு குருக்கள்,    கோயில் பணியாளர்கள்  செய்திருந்தனர்.  பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான  பக்தர்கள் வருகை தந்து  வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top