Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வு

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்ட திமுகவின் சுந்தரி அழகப்பன்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவராக திமுகவின் சுந்தரி அழகப்பன் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.
பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சுந்தரிஅழகப்பனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மு.செ.கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் மலர் கொத்து வழங்கியும் சால்வை அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பேரூராட்சி தலைவராக தேர்வு பெற்ற சுந்தரி அழகப்பன்,  பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் , சுந்தரி அழகப்பன் திமுக கட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக வெற்றிபெற்ற சுந்தரி அழகப்பனுக்கு திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top