Close
செப்டம்பர் 20, 2024 5:38 காலை

நெல்லையில் இதழாளர் அய்கோ எழுதிய ‘குலம் காக்கும் தெய்வங்கள்’என்ற நூல் வெளியீட்டு விழா

திருநெல்வேலி

நெல்லையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா

நெல்லை ரெட்டியார்பட்டி வைகறை திருமண மண்டபத்தில் வழக்கறிஞர் பாலமுருகன் _ பொறியாளர் தனு திருமண விழாவை முன்னிட்டு, இதழாளர் அய்கோ எழுதிய ‘குலம் காக்கும் தெய்வங்கள்’என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நூலை தொழிலதிபர் ‘ மயன்’ ரமேஷ் ராஜா வெளியிட, தொழிலாளர் துறை துணை ஆணையர் சுடலைராஜன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கந்தன் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மொழிப் புலத்தலைவர் பிரபாகரன், ஆல் இந்திய ரேடியோ முன்னாள் அறிவிப்பாளர் கவிப் பாண்டியன், எழுத்தாளர், ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் ஆகியோர் நூலை திறனாய்வு செய்து பேசினர். டாக்டர் பிரேமச்சந்திரன் பாடல்கள் பாடினார்.

விழாவில் தொழில் அதிபர்கள் மால்ராஜா, ஜெபராஜ், வழக்கறிஞர் பெலிக்ஸ், தமமுக மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன், நெல்லை பொதுநல இயக்கத் தலைவர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top