Close
செப்டம்பர் 20, 2024 6:31 காலை

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

குழிபிறை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா குழிபிறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் 50 -ஆவது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகே குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குழிபிறை நகரத்தார் மேம்பாட்டு அறநிலை சார்பில் நடைபெற்ற 50 -ஆவது இலவச மருத்துவ முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி   தொடக்கி வைத்தார்.

இம்முகாமில் பொது மக்களுக்கு இருதய பரிசோதனை, மூட்டு வலி, இடுப்பு வலி,சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. உடல் பரிசோதனை செய்யப்பட்ட பொது மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், திமுக திருமயம் ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன், சர்க்கரை நோய் மருத்துவர் தங்கவேல், பொதுமருத்துவர் அறுவை சிகிச்சை பெரியகருப்பன், பொதுநல மருத்துவர் ராமநாதன், பொதுநல மருத்துவர் நாச்சம்மை, பொதுநல மருத்துவர் சிவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளைசெய்தனர்.

இதில் குழிபிறை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top