Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

வல்லத்திராகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சி. ராமச்சந்திரன் மறைவு

புதுக்கோட்ைட

மறைந்த வல்லத்திராகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சி.ராமச்சந்திரன்

புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வின் காரணமாக வியாழக்கிழமை (மார்ச் 17) காலையில் காலமானார்.

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் இயக்குநர், பால் கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர், புதுக்கோட்டை திருக்கோயில்கள் அறங்காவலர், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர், திருவரங்கும் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், வல்லத்திராக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

இவருக்கு புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் செயலர் இரா.சம்பத்குமார், இரா.செல்வகுமரா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார், சாய்ராம் குழும ஒருங்கிணைப்பாளர் இரா.சதீஷ்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர்.

இறுதிச் சடங்குகள் (மார்ச் 18) வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வல்லத்திராக்கோட்டையில் நடைபெறுகிறது. தொடர்புக்கு-9443190405.

திருச்சி மக்களவை காங்கிரஸ் எம்பி. திருநாவுக்கரசர்  இரங்கல்: புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் ரா. சம்பத்குமார் மற்றும் நீதியரசர் ரா.சுரேஷ் குமார் ஆகியோரின் தகப்பனார் வல்லத்திராக்கோட்டைசி. ராமச்சந்திரனார்  உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து துயருற்றேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கம் வளர முக்கிய தலைவர்களில் ஒருவராய் திகழ்ந்தவர் சி . ராமச்சந்திரனார்  வல்லத்திராக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்புடன் பணியாற்றியவர். என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். அமரர் ஜி.கே. மூப்பனார், அண்ணன்  ஆர்.எம். வீரப்பன் போன்றவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராய் திகழ்ந்தவர்.
தந்தையை இழந்து வாடும் சகோதரர்கள்  ரா. சம்பத்குமார் மற்றும் நீதியரசர்சுரேஷ் குமார் ஆகியோருக்கும் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top