Close
ஏப்ரல் 24, 2026 12:49 காலை

உலக சிக்கன நாள் விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் கவிதாராமு பரிசளிப்பு

புதுக்கோட்டை

உலகசிக்கன நாள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சிக்கன நாளினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 34  பேருக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், உலக சிக்கன நாளினை முன்னிட்டு மாணவ, மாணவிகளிடையே சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டி மற்றும் சொற்றொடர் அமைத்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

அதன்படி இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 34 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுபரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) கௌரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top